districts

img

தேசபக்த உணர்வை மக்களிடம் ஏற்படுத்திய ராணுவ இசைக்குழு

சென்னை,  ஜன.28- சென்னை வேளச்சேரி யில் உள்ள  பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி  வணிக வளாகம் ஒவ்வொரு பண்டிகை மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சி களை நடத்தி வாடிக்கை யாளர்கள் மற்றும் பார்வை யாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.  அந்த வகையில் இந்தி யாவின் 75வது குடியரசு தின விழாவை, ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெறும் ராணுவ வீரர்களின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக பேண்ட் இசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த வணிக வளாகத்தின் மையப்பகுதியில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சி கள் அனைத்தும் பார்வை யாளர்களை வெகுவாக கவர்ந்தது. 25 உறுப்பினர்களைக் கொண்ட இசைக்குழு, ஜெய் ஹோ, கேசரி, மா துஜே சலாம் உள்ளிட்ட 12 பாடல்களை பாடி தேச பக்தி உணர்வை பார்வை யாளர்களிடம் ஏற்படுத்திய  தோடு அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார் கள். பிரமாண்டமாக நடை பெற்ற இந்த இசை நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றதோடு, மேலும் நமது துணிச்சல் மிக்க ஆயுதமேந்திய அதிகாரி களின் தியாகங்கள் மற்றும் அர்ப்பணிப்புகள் குறித்தும் பேசப்பட்டது என்று  பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டி மைய இயக்குநர் சபரி நாயர் கூறினார்.