districts

அரக்கோணத்தில் கொலை சேலம் ரயிலில் பிடிபட்ட கொலையாளிகள்

அரக்கோணம், ஆக.11-

     சென்னையைச் சேர்ந்த வாலிபரை, அரக்கோணத்தில் கொலை செய்த இரண்டு வாலிபர்கள் சேலம் வழியாக ரயிலில் தப்பிச் சென்ற போது காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.

     சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த வர் பிராங்க்ளின் (26). இவர், கடந்த ஒரு மாதமாக ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஏபிஎம் கிறிஸ்தவ தேவால யம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.

     ஆகஸ்ட் 6 ஆம் தேதி இரவு பிராங்க்ளின், அரக்கோணம் ரயில் நிலை யம் அருகே நடந்து சென்று கொண்டி ருந்தார். அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், திடீரென்று பிராங்க்ளினை சுற்றி வளைத்து கத்தியால் சரமாரியாக வெட்டி யது.  பின்னர் அந்த கும்பல் அங்கி ருந்து தப்பி ஓடிவிட்டது. மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பிராங்க்ளின் உயிரிழந்தார்.

     இதையடுத்து கொலையாளிகளைப் பிடிக்க காவல்துறையின் தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவர் தன்பாத் ரயிலில் சேலம் வழியாக தப்பிச் செல்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில், காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார் தலைமையில் காவல்துறை யினர் ஆக. 9 ஆம் தேதி அதிகாலை சேலம் வந்த தன்பாத் ரயிலில் சோதனை செய்த னர். அப்போது, முன்பதிவில்லா பெட்டி யில் சந்தேகத்திற்கு இடமான வகையில் அமர்ந்து இருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில், அவர்களில் ஒருவர், சென்னை செங்குன்றம் பவானி நகரைச் சேர்ந்த லோ கேஷ்வரன் (28), மற்றொருவர், சென்னை மணலி யை சேர்ந்த கார்த்தி (28) என்பதும் தெரிய வந்தது.

     அரக்கோணத்தில் பிராங்க்ளின் கொலையில் தேடப்பட்டு வந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் சேலம் ரயில் நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து அரக் கோணம் காவல் துறைக்கு தகவல் அளித்து வரவழைத்தனர். பின்னர் அவர்களிடம், பிடிபட்ட இருவரையும் ஒப்படைத்தனர்.