சென்னை, அக். 14- சென்னையைச் சேர்ந்தவர் பரத் மோகன். இவரது மனைவி நிர்மலா தேவி. இவர்களது 16 வயது மகன் ஹரிஷ் குழந்தையில் இருந்தே மன இருக்க நோயால் பாதிக்கப்பட்டவர். இதனால் வரை சிறப்பு பள்ளி யில் பெற்றோர் படிக்க வைத்தனர். மேலும் குழந்தை ஏதா வது சாதிக்க வைக்க வேண்டும் என நீச்சல் பயிற்சி அளித்தனர். இந்நிலையில் இலங்கை தலை மன்னாரி லிருந்து பாக் ஜலசந்தி வரை 32 கி.மீ. தொடர்ந்து நீந்தி சாதனை படைத்தார். அவரது சாதனை ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரை அழைத்து சாதனை புரிந்ததற்காக பாராட்டு தெரிவித்தார். தான் பெற்ற சான்றிதழ்களையும், பதக்கங் களையும் அமைச்சரிடம் காட்டி ஹரிஷ் மகிழ்ந்தார்.