திருத்தணி, செப். 18- கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் எப்ஆர்சிஎஸ் பட்டம் மற்றும் இந்து தமிழ் நாளிதழின் மருத்துவ நட்சத்திர விருது பெற்ற திருத்தணி மருத்துவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. திருத்தணி பேராசிரியர் மரு. எம்.ரகுராம் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முன்னாள் பொது அறுவை சிகிச்சை துறையின் தலைவராக இந்திய மருத்துவக் கழகத்தின் புரவலராகவும் பணியாற்றினார். இவருக்கு கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் கவுரவ எப்ஆர்சிஎஸ் பட்டமும், இந்து தமிழ் நாளிதழின் மருத்துவ நட்சத்திர விருது வழங்கப்பட்டது, இதனால் அரக்கோணத் தில் நடந்த நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவித்து கவுரவித்தனர். அவர் புகழ் வாய்ந்த அறுவை சிகிச்சை மருத்து வர், திருத்தணி நகரம் மற்றும் சுற்றுப்புற கிராம ஏழை எளிய மக்களுக்கு கடந்த 50 ஆண்டுகளாக மருத்துவராக சேவை புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.