districts

img

தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா

சென்னை, ஜன. 27- ஆர்.கே.நகர் 41ஆவது வட்டத்தில் தூய்மை பணி யாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மிக்ஜம் புயல் காரண மாக ஏற்பட்ட வெள்ளத்தின் போது ஆர்.கே. நகர் 41ஆவது வட்டத்தில் பணி யாற்றிய மாநகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், மலேரியா பிரிவு ஊழியர்கள், குடிநீர் வாரிய ஊழியர்கள், மின்சார வாரிய ஊழியர்கள், மாநகராட்சி பள்ளி தூய்மை  பணியாளர்கள், அம்மா உணவக ஊழியர்கள், 100  நாள் வேலை திட்ட ஊழி யர்கள் ஆகியோருக்கு பாராட்டு விழா வெள்ளி யன்று (ஜன. 26) நடை பெற்றது. மாமன்ற உறுப்பினர் பா.விமலா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட ஊழி யர்களுக்கு அரிசி, போர்வை  உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கி அவர்களது சேவையை பாராட்டினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச்  செயலாளர் எல்.சுந்தரரா ஜன், செயற்குழு உறுப் பினர்கள் அ.விஜயகுமார், ஆர்.லோகநாதன் பகுதிச்  செயலாளர் வெ.ரவிக் குமார், வட்டச் செயலாளர் கீ.தேவன், பகுதிக்குழு உறுப்பினர்கள் ஜெயன், விஜய், ஜோதிபாசு, பழனி லோகயா, கோவிந்தன், கந்தா, சரவணன், ராஜா,  மகேஸ்வரி, பிரவீனா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.