சென்னை, அக். 2- தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்துக் கழ கங்களிலும் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு புதிய பணியாளர்கள் நியமிக்கப் படவில்லை. இதனால் பேருந்துகளை இயக்குவதில் பெரும் சிக்கல் இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு விரைவு போக்கு வரத்துக் கழகத்தில் 685 பணியிடங்களையும் (ஓட்டு நர், நடத்துநர் பணிகளை ஒரு சேர மேற்கொள்வோர்), கும்பகோணம் போக்கு வரத்துக் கழகத்தில் 122 ஓட்டுநர் பணியிடங்களையும் நிரப்ப அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, கும்ப கோணம் (174). சேலம் (254), கோவை (60), மதுரை (136). திருநெல்வேலி (188) ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 812 ஒட்டுநர், நடத்துநர் பணிகளை ஒருசேர மேற்கொள்வோருக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப சம்பந்தப்பட்ட மேலாண் இயக்குநர் களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தேர்வுக் கான பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. அதேநேரம், மாநகர போக்குவரத்துக் கழ கத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.இந்நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழக மானது ஒப்பந்தம் மூலம் 234 ஓட்டுநர், நடத்துநர்களை தேர்வுசெய்ய தகுதி யான தனியார் நிறுவனங்க ளிடம் ஒப்பந்தம் மேற்கொள் வதற்கான இ-டெண்டர் வெளியிட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத் துக்கு 117 ஒட்டுநர்கள், 117 நடத்துநர்கள் பணிக்கு அனுப்ப விரும் பும் நிறுவனங்கள் இ-டெண்டரில் 6ஆம் தேதி முதல் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு http://tntenders.gov.in/nicgep/app 6160 இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படை யில் ஓட்டுநர்கள் நியமிக் கப்பட்டால் விபத்துகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்களும், தொழிற்சங்கத்தினரும் தெரிவிக்கின்றனர்.