districts

img

குடியிருப்புகளை அகற்றும் உத்தரவுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்

சென்னை, பிப். 23 - தாம்பரம் மாநக ராட்சிக்கு உட்பட்ட சுமார் 10 ஏரிகள் உள்ளன. இந்த  ஏரிகளையொட்டி மக்கள் பல  ஆண்டுகளாக வசித்து வரு கின்றனர். இந்த மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று வகைப்படுத்தி வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், பல்லா வரம் சஞ்ஜெய்காந்தி நகர், தாம்பரம் தேவநேசன் நகர் உள்ளிட்ட பகுதிகளை புத னன்று (பிப்.22) சிபிஎம்  மத்தியக் குழு உறுப்பினர்  பெ.சண்முகம் பார்வை யிட்டார். அங்கு நடைபெற்ற ஊர்க் கூட்டங்களில் பெ.சண்முகம் பேசியதன் சுருக்கம் வருமாறு: 13 கிராமங்களில் உள்ள  ஏரி, விவசாய நிலங்களை அழித்து பரந்தூர் விமான  நிலையம் அமைக்கப்படு கிறது. 200 வருடத்திற்கு முந்தைய கிராமத்தையே அழிக்கின்றனர். எனவே, நில வகைமாற்றம் செய்து  பட்டா வழங்க முடியாது என்பதெல்லாம் ஏமாற்று வேலை. தற்காலத்திற்கு ஏற்ப நிலங்களை வகை களை மாற்றி ஆவணங் களை எழுத வேண்டும். ஒரே சர்வே எண்ணில் உள்ள மனைகளை பிரித்து  (சப் டிவிஷன்) ஒரு பகுதி யினருக்கு பட்டா வழங்கு வது,

மறுபகுதியினருக்கு வழங்க மறுப்பது எந்த வகை யிலும் நியாயம் இல்லை. நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் சரியான தகவலை கூறி, அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடக் கூடாது என்பதை அழுத்தமாக வலியுறுத்தி வாதாடுவதில்லை. நீதி பதிகளும் எல்லையை மீறி, மனிதாபிமானமற்ற முறை யில் உத்தரவுகளை பிறப் பிக்கின்றனர். இதனால்  அரசுக்கும் மக்களுக்கும் இடையே நீதிமன்றம் மோதலை உருவாக்குகிறது. மார்ச் 22 போராட்டம் ஆகவே, குடியிருப்பு விவகாரங்களில் உயர் நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று  முதலமைச்சரிடம் வலியுறுத் தினோம். அதன் பிறகு குடியிருப்புகளை அகற்றும் முயற்சி பெருமளவு நிறுத் தப்பட்டுள்ளது. இருப்பி னும், குடிமனைப் பட்டா  கிடைத்தால்தான் பிரச்சனை  முழுமையாக தீரும். மக்களை பகைத்துக் கொண்டு நல்ல ஆட்சியை நடத்த முடியாது. ஒன்றுபட்டு போராடினால்தான் பட்டா கிடைக்கும். இது தொடர்பான கோரிக்கையை சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எழுப்பும். தாம்பரம் மாநகராட்சி மக்களுக்கு குடிமனைப் பட்டா கேட்டு  மார்ச் 22 அன்று தாம்பரத் தில் கோரிக்கை மாநாடு நடைபெறும் இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வின்போது கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், பகுதிச் செயலாளர்கள் எம்.சி.பிர பாகரன் (பல்லாவரம்), தா.கிருஷ்ணா (தாம்பரம்), மாவட்டச்செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தாமு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.