districts

img

குடியிருக்கும் இடத்திலேயே அடுக்குமாடி வீடு வாரிய தலைவரிடம் சிபிஎம் கோரிக்கை

சென்னை, பிப். 7 - அழகிரி நகர் மக்க ளுக்கு, அவர்கள் வசிக்கும் இடத்திலேயே அடுக்கு மாடி குடியிருப்பு கட்டித் தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. சென்னை மாநக ராட்சிக்குபட்ட ஆயிரம் விளக்கு பகுதி, கிரீம்ஸ் சாலையில் உள்ளது அழ கிரி நகர். இங்கு சுமார் 250 குடியிருப்புகள் உள்ளன. சுமார் 12 கிரவுண்ட் பரப்ப ளவு கொண்ட இந்த பகுதியில் 250 குடும்பங் களை சார்ந்த சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் 69 ஆண்டு களாக வசித்து வரும் இம்மக்களில் பெரும்பாலா னோர் பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவர்கள். முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்தபோது, 1999ஆம் ஆண்டு தாட்கோ மூலம் 239 குடிசைகள் கல்நார் ஓடு வீடுகளாக மாற்றப்பட்டது. இந்த குடியிருப்பை 2001ம் ஆண்டு, அப்போதைய மேயரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த குடியிருப்பு பகுதி யில், சுமார் 3 கிர வுண்ட் நிலத்தில், ‘அட்சய பாத்திரம்’ தொண்டு நிறு வனம் செயல்படுவதற்கு அதிமுக அரசு இடம் ஒதுக்கி கொடுத்தது. இத னால் 8 - 3/4 கிரவுண்ட் நிலத்தில், மிகுந்த நெருக்கடி யோடு மக்கள் வசித்து வரு கின்றனர்.

இப்பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரி யம் சார்பில் அடுக்குமாடி வீடுகளை கட்டித்தர வேண்டியதன் அவ சியத்தை விளக்கி, சட்ட மன்றத்தில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பி னர் டாக்டர் எழிலன் பேசி யுள்ளார். எனவே, அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகை யில் அடுக்குமாடி குடியிருப்பு களை கட்டித் தர உரிய நடவடிக்கைகளை எடுக்க கோரி திங்களன்று (பிப்.6) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட மேலாண்மை இயக்குநர், கோரிக்கையை நிறை வேற்றி தருவதாக உறுதி அளித்துள்ளார். இந்நிகழ்வின் போது கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.திருவேட்டை, பகுதிச் செயலாளர் இரவீந்திர பாரதி, அமைப்பு சாரா சங்க மாவட்டச் செய லாளர் செந்தில்குமார் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.