districts

img

நல வாரிய வழிகாட்டுதலை அறிவித்திடுக: டியூஜே

சென்னை,டிச.12- தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் செய்தியாளர்கள் இணைவதற்கான முழுமையான வழிகாட்டுதல் விதிமுறைகளை முறையாக அறிவிக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் (டியூஜே) சென்னை மாவட்ட பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சென்னை மாவட்ட பேரவை ஞாயிறன்று(டிச.12) சென்னை சிந்தாதிரிபேட்டையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மு.க.ரவிச்சந்திர ஹாசன் தலைமை தாங்கினார். அண்ணாதுரை வரவேற்றார்.  மாவட்டச் செயலாளர் ம.மீ.ஜாபர் வேலை அறிக்கையை சமர்பித்தார்.  டியூஜே மாநிலத்தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன், பொதுச்செயலாளர் ஏ.சுரேஷ், பொருளாளர் வி.ரவிச்சந்திரன், மாநில நிர்வாகிகள் பி.சண்முகவேலு, பி.ஆர்.சுப்பிரமணி, பி.ஆர்.வேலாங்கன், கி.மணிவாசகம், தீக்கதிர் தலைமை நிருபர் சி.ஸ்ரீராமுலு, திருவள்ளுர் மாவட்டத் தலைவர் ஆர்.முருககனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஜெயராஜ் நன்றி கூறினார். செய்தி மக்கள் தொடர்புத்துறை நிர்வாக வசதிக்காக சென்னை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய 6 மண்டலங்களில் அவற்றைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் ஒருங்கிணைத்து பணியாற்ற உள்ளதற்கு இந்த பேரவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், அந்த பணிகளை உடனடியாக துவக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. புதிய நிர்வாகிகள் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சென்னை மாவட்டத் தலைவராக மு.க. ரவிச்சந்திரஹாசன், செயலாளராக ம.மீ.ஜாபர், பொருளாளராக ரத்தின பாண்டியன் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.