சிதம்பரம், பிப். 17- சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழகம் வேளாண்துறை முன்னாள் மாணவர் கழகம் சார்பில் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. துறையின் முதல்வர் சுந்தரவரதாஜன் தலைமை தாங்கினார். மாணவர் கழகத்தின் செய லாளர் அறிவுடைநம்பி வர வேற்றார். இந்நிகழ்ச்சியில், அண் ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றில் முதன் முறையாகப் பல் கலைக்கழக மாணவர் துணை வேந்தராக வேளாண் புலத்திலிருந்து பொறுப் புக்கு வந்துள்ள கதிரேசனை கவுரவித்தனர். வேளாண் மைத்துறையில் சிறப்பாகப் பணிபுரிந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் கவுரப் படுத்தினர். இதனைதொடர்ந்து, வேளாண்மை துறை மாண வர் கழகம் சார்பில் இலச் சினையை துணை வேந்தர் கதிரேசன் வெளியிட்டார். அமெரிக்கா சர்வதேச உணவுக் கொள்கை மையத் தின் இயக்குநர் சுரேஷ்பாபு, வேளாண் துறை விரிவாக் கக் கல்வி இயக்குநர் முனைவர். ஜவகர்லால், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண் வானிலை ஆய்வு மைய துறை தலைவர் ராமநாதன், ஆனந்த், ஜம்மு மாநில வன துறை மையத்தின் சார்பில் பட்டாபிராமன், மூத்த திட்ட மேலாளர், ஐரோப்பிய யூனியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். துணைவேந்தர் கதிரேசன் ஏற்புரை வழங்கினார்.