districts

img

அண்ணா உயிரியல் பூங்காவில் யானைகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

சென்னை, டிச.6-  அண்ணா உயிரியல் பூங்காவில்  ரோகினி,  பிரக்ருதி என இரண்டு யானைகள் பராமரிக் கப்பட்டு வருகின்றன.  பூங்காவில் யானைகள் இருப்பிடம் 21 ஏக்கர் நிலப்பரப்பில் அமையப் பெற்றுள்ளது. ரெனால்ட் நிசான் நிறுவனமும் மகேந்திரா வோர்ல்டு சிட்டி நிறுவனமும் இணைந்து சமூகபொறுப்பு திட்டத்தின் கீழ் யானைகளின் இருப்பிடத்தில் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தியுள்ளன.  யானைகளுக்கான ‘கிரால்’ கால்நடை  மருத்துவ வசதிக்கேற்ப கட்டமைக்கப் பட்டுள்ளது. யானைகளுக்கு உணவு சமைப் பதற்கு ‘சமையலறை’, யானைகள் பராமரிப்பாளர்களுக்கு தங்கும் ‘வீடு’, யானைகள் குளிப்பதற்கு வசதியாக தண்ணீர் தொட்டி மற்றும் தண்ணீர் தெளிப்பான் (ஷவர்)   புதுப்பிக்கப்பட்டுள்ளது. யானை கள் இருப்பிடங்களிலிருந்த புதர்கள், களைகள் அகற்றப்பட்டு, அகழி ஆழப்படுத் தப்பட்டுள்ளது. மேலும் 2 ஏக்கர் அளவில் யானைகளுக்கான தீவண தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.  புதிய வசதிகளை   ரெனால்டு நிசான்  நிறுவன துணைத்தலைவர் ராமகிருஷ்ணன்,  கூடுதல் முதன்மை வன பாதுகாவலர் சீனிவாஸ் ரெட்டி ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் உயிரி யல் பூங்காவின் துணை இயக்குநர், ஆர்.காஞ்சனா, உதவி இயக்குநர், பொ.மணி கண்டபிரபு, பூங்கா அலுவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.