ராணிப்பேட்டை, அக். 14 - அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சனிக்கிழமை (அக். 14) அன்று ராணிப்பேட்டையில் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். 15 மற்றும் 20 கி மீ தூரம் வரைக்கும் நடைபெற்ற இந்த போட்டியில் 680 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஞானசேகரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா ஆகியோர் கலந்து கொண்டனர். கடலூர் கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே விரைவு மிதிவண்டி போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் என்று தனித்தனியாக ஆறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, விளையாட்டு அலுவலர் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ. 5 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ. 3000 ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ. 2000 வழங்கப்பட்டது.