அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அண்ணா நகர் பகுதி, எம்.எம்.டி.ஏ. காலனி கிளை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. பகுதி தலைவர் உஷா தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட தலைவர் ஆ.சாந்தி, செயலாளர் நாகரத்தினம், கிளை தலைவர் சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.