districts

img

கோடை விடுமுறை வழங்க வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

திருப்பூர், ஏப். 26 – அங்கன்வாடி ஊழியர்கள் மற் றும் உதவியாளர் சங்கத்தின் இரு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரகத்தில் மேற் கொள்ளப்பட்ட காத்திருப்புப் போராட் டம் நிறைவு பெற்றது. மே மாதம் கோடை விடுமுறை, காலிப்பணியிடங்களை நிரப்புவது ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவல கங்களில் காத்திருப்புப் போராட்டம்  நடத்துவது என்ற முடிவின் அடிப்ப டையில் செவ்வாயன்று அங்கன் வாடி ஊழியர், உதவியாளர் சங்கத் தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சிய ரகத்தை முற்றுகையிட்டனர். தொடக்கத்தில் ஆட்சியரக வளா கத்திற்குள் அனுமதிக்காமல் நுழை வாயில் கதவை காவல் துறையினர் பூட்டி வைத்து தடுத்தனர். எனினும் அங்கன்வாடி ஊழியர்கள் காவல் துறையினரிடம் வாக்குவாதம் செய்து ஆட்சியரக வளாகத்திற்குள் சென்றனர். போராட்டத்தில் பங்கேற் றோர் இரவு அங்கேயே தங்கிவிட்ட னர். மாநிலம் முழுவதும் முழுசக்தி யைத் திரட்டி அங்கன்வாடி ஊழியர் கள், உதவியாளர்கள் போராட்டம்  நடத்திய நிலையில், சென்னையில் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய அமைச்சர் கீதா ஜீவன், மே மாதம் விடுமுறையை உடனே நிறைவேற்றுவதாகவும், காலிப்பணியிடங்களை நிரப்ப நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி யளித்தார். இதையடுத்து போராட் டத்தை அங்கன்வாடி சங்கத்தினர் நிறைவு செய்தனர். இதற்கிடையே திருப்பூரில் நடை பெற்ற இரண்டாவது நாள் போராட் டத்தில் சிஐடியு விசைத்தறி தொழிலா ளர் சங்க மாநிலத் தலைவர் பி.முத்து சாமி, சிஐடியு மாவட்ட தலைவர் சி. மூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர்  கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் ஜி.சம்பத் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கோரிக்கைகள் வெற்றி பெற்ற நிலையில் பிற்பகல் திருப்பூரில் காத் திருப்பில் ஈடுபட்டிருந்தோர் போராட் டத்தை முடித்துக் கொண்டனர். இந்த  போராட்டத்தில் திருப்பூர் மாவட்டம்  முழுவதும் இருந்து 2ஆயிரத்து 300  பேர் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சி யரக பகுதி முழுவதும் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களாகவே காட்சியளித்தது.