சிதம்பரம் அருகே அண்ணாமலை நகரில்விசிக தலைவரும் வேட்பாளருமான தொல்.திருமாவளவன், அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வத்துடன் இணைந்து பானை சின்னத்திற்கு வாக்குசேகரித்தார். அண்ணாமலைநகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி, திமுக கொத்தங்குடி ஊராட்சி செயலாளர் வெங்கடேசன், சிபிஎம் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, சிதம்பரம் நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், மூவேந்தர் முன்னேற்ற கழக நிர்வாகிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.