districts

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் முயற்சி

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் முயற்சியால் செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில்  மிக் ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பல்வகை மாற்றுத் திறனாளிகளுக்கு வெள்ள நிவாரணம் பொருட்கள் வழங்கப்பட்டது. சங்கத்தின் ஒன்றிய தலைவர் கே.லிங்கன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்திறன் அலுவலர் ஜி.கண்ணன், இளநிலை உதவியாளர் ராஜேஷ்  சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.தாட்சாயணி, சங்கத்தின் ஒன்றிய செயலாளர் அருள் ராணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.