திருவள்ளூர்,ஜூலை 27-
பொன்னேரி நகராட் சிக்கு உட்பட்ட 27 வார்டு களில் சுமார் 35 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மொத்தம் 69 கிலோமீட்டரில் 237 தெருக்கள் உள்ளன. இந்நிலையில் பொன்னேரி நகராட் சிக்குட்பட்ட பகுதி களில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2011-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.பின்னர் இடம் தேர்வு செய்வ தில் குளறுபடி, நிதி ஒதுக்கு வதில் காலதாமதம் காரண மாக பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2018 -ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டப்பணி தொடங்கப் பட்டது. இதனை இரண்டு வருடத்திற்குள் முடிக்க திட்டமிட்டு ரூ.54.78 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் பணி தொடங்கி 6 ஆண்டு கள் ஆகியும் இன்னும் பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி இன்னும் முடியவில்லை. நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் 22 வார்டுகளில் மட்டும் நடை பெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணி 41 கிலோ மீட்டர் தூரம் மட்டும் நடை பெற்று வருகிறது. வேண்பாக்கம், பழைய பேருந்து நிலையம், கள்ளுக்கடை மேடு ஆகிய 3 இடங்களில் கழிவு நீர் சேகரிப்பு தொட்டி, மற்றும் பம்பிங் ஸ்டேஷன் அமைக் கப்பட்டு வருகிறது. மேலும் பொன்னேரி அடுத்த பெரிய காவனம் ஆரணி ஆற்றின் அருகே கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையம் கட்டப்படு கிறது. என்.ஜி.ஓ. நகரில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளது. இங்குள்ள தெருக்களில் குழாய் பதிக்க ஆரம்பிக்கப் பட்ட பணிகள் ஒரு வருடமாக நடைபெற்று வருகின்றன. இதனால் தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை சேறும் சகதியுமாக வும் மாறி பொதுமக்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. ஏற்கெனவே பொன்னேரி நகராட்சி பகுதி யில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொது மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி யுள்ளனர். ஆனாலும் கடந்த 6 ஆண்டுகளாக இந்த பணி நத்தை வேகத்தில் நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.