புதுச்சேரி, பாகூர், குருவி நத்தத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் காமராஜர் கல்வி மையத்தின் சார்பில் எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஜெகதீசன் கலந்துகொண்டு 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு எழுதுவது சம்பந்தமான பல்வேறு ஆலோசனைகளை வழங்கி ஊக்கப்படுத்தினார். நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி முன்னாள் மாநில செயலாளர் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு பேசினார்.