districts

img

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்க கிளை உதயம்

வேலூர்,நவ.10 - வேலூர்-ஆற்காடு சாலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் கிளை துவக்க விழா சிஐடியு மாவட்டத் தலைவர் டி. முரளி தலைமையில் நடைபெற்றது.  வேலூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சங்க கொடியை சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன் ஏற்றி வைத்தார். பெயர்ப் பலகையை ஜி.ஜி.செல்வம் திறந்து வைத்தார்.  இந்நிகழ்வில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் வி.நாகேந்திரன், துணைத் தலைவர் எம்.காசி, சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஜி.கேசவன், மாவட்ட செயலாளர் என்.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கிளையின் தலைவராக அண்ணாதுரை, செயலாளராக ரமேஷ், பொருளாளராக அன்புராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.