அம்பேத்கர் பிறந்த நாளான்று பொன்னேரியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன், பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர், மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.அனீப், இ.தவமணி, டி.மதன், எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஏ.கலாம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் மாவட்ட பொருளாளர் சிவக்குமார், அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் காளமேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஏ.என்.குப்பம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.