districts

img

அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரியில் உலக புகைப்பட தின கண்காட்சி

சென்னை,ஆக,22-

      சென்னை, வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கலைக்கல்லூரி வளாகத்தில் நம்ம சென்னை என்ற தலைப்பில் புகைப்படக்கண்காட்சி திங்களன்று (ஆக.21) நடைபெற்றது.

      உலகப்ப்புகைப்பட தினம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடை பெற்ற இக்கண்காட்சியில் காட்சி வழித் தகவல் தொடர்பியல் துறை மாணவர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் படம்  பிடித்த 90 நிழற்படங்கள் இடம் பெற்றன. கண்காட்சியை திருவிகநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி திறந்து  வைத்தார்.  நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் (பொ) வே.பிரகாஷ்.  துறைத்தலைவர் செ.ஜெபக்குமார், பேராசிரியர்கள் எம்.ராஜி,  காயத்திரி, எம்.தேவேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.