districts

img

துரை ரவிக்குமாரை ஆதரித்து கூட்டணி கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு

கள்ளக்குறிச்சி, ஏப்.3 - விழுப்புரம் மக்களவைத் தொகுதி யில் போட்டியிடும் விசிக வேட்பாளர் துரை ரவிக்குமாரை ஆதரித்து திருநாவ லூர் மேற்கு ஒன்றியம் திமுக ஒன்றிய செயலாளர் கே.வி.முருகன் தலைமையில்  வாக்கு சேகரித்தனர்.  கூவாகம்,கொரட்டூர்,இருந்தை, பரிக்கல்,பெரும்பாக்கம், ஆத்தூர், நன்னாவரம், பா.கில்லனூர், பெரும்பட்டு, டீ.ஒடத்தூர், களமரு தூர், கலவனூர், ஆதனூர், காம்பட்டு, உநெமிலி,பாண்டூர், சமனங்கூர், செங்குறிச்சி,பாதூர் ஆகிய ஊராட்சிகளில் வேட்பாளர் துரை.ரவிக்குமாருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், உளுந் தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிகண்ணன், விசிக மாவட்டச் செயலாளர் அறிவுக்கரசு, சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் அலமேலு, மேற்கு  ஒன்றிய செயலாளர் டி.எஸ்.மோகன் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சார்ந்தவர்கள் பங்கேற்றனர். வேட்பாளர் து.ரவிக்குமாரை ஆதரித்து உளுந்தூர்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிகண்ணன் களமருதூர் பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதில் பேசிய அவர், மோடி தலை மையிலான பாஜக அரசு பொய்யான  வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி வருகிறது. மக்களை ஏமாற்றுவதில் அவர்கள் செலுத்திய கவனத்தை மக்கள் நலத்திட்டங்களுக்கு செலுத்த வில்லை. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தொடர்ந்து மக்களின்  வாழ்வாதாரத்தை உயர்த்தக்கூடிய நலத்திட்டங்களை திட்டமிட்டு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.  மக்கள் நல திட்டங்களையும், பெண்கள் வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்களையும் பாஜக விரும்பு வதில்லை. அதனால்தான் தமிழக அரசை எதிரி போல் பார்க்கிறது. திமுக அரசு கொண்டு வந்துள்ள மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம், விடியல் பயணம் போன்ற சமூகநீதித் திட்டங்கள் தொடர வேண்டுமென்றால் பாஜக அரசு அகற்றப்பட வேண்டும். நமக்கான கோரிக்கைகளுக்காக குரல் எழுப்பும் சரியான நபரை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் நமக்கான வளர்ச்சி திட்டங்கள் கிடைக் காது. எனவே யார் வெற்றி பெற்றால் நமது எதிர்காலம் நன்றாக இருக்கும் என சிந்தித்து வாக்களியுங்கள் எனக்கேட்டுக்கொண்டார்.  அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு  ஆதனூர் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் துரை  ரவிக்குமார்  அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மக்கள் மத்தியில்  பேசுகையில், அம்பேத்கர்  இயற்றிய  இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே  மாற்றி அமைக்க முயல்கின்ற பாஜக  அரசை தூக்கி எறிய வேண்டு மென்றால் நீங்கள்  பானை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.