கடலூர், பிப்.11- கடலூர் நகர அனைத்து கட்சிகள் குடி யிருப்போர் கூட்டமைப்பு மாநகர பொதுநல அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலு வலகத்தில் நடைபெற்றது. இதில், திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலை யத்தை கடலூர் திருப்பாப்புலியூர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். கடலூர் துறை முகம் சந்திப்பு, திருப்பாப்புலியூர் ரயில் நிலை யத்தில் பயணிகள் நிழற்குடை, குடிநீர், கழிப்பறை, இரவு நேரங்களில் பேருந்து வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். கம்மியம்பேட்டையில் பிரதான சாலை யோடு ரயில் பாதை சந்திக்கும் இரண்டு இடங்களில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும், குப்பங்குளம், போடி செட்டிதெரு கடலூர் முதுநகர் சுத்துகுளத் தில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும், மன்னார்குடி, மஹால் விரைவு வண்டி கள் கடலூரில் நின்று செல்ல வேண்டும், சேலம்- விருத்தாசலம், விழுப்புரம் -தாம்பரம் ரயில்கள் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க திருச்சி கோட்டம் முன்மொழிந்துள்ளது. இதை விரைந்து நிறைவேற்ற வேண்டும். உழவன், ராமேஸ்வரம், கம்பன், மன்னார்குடி ரயில்கள் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். கடலூர்- புதுவை- சென்னை இருப்புப் பாதை திட்டத்தை நிறைவேற்ற கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 2 அன்று கடலூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் பிப். 29 அன்று பிரச்சாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் வழக்கறிஞர் ஏ.எஸ்.சந்திரசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநகராட்சி துணை மேயர் தாமரைச் செல்வன், திக மாவட்டச் செயலாளர் எழிலேந்தி, மமக மாவட்டச் செயலாளர் ரஹீம், சிபிஐ நகர செயலாளர் நாகராஜன், குடியிருப்போர் சங்க சிறப்பு தலைவர் மருதவாணன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் கண்ணன், மாநகர செயலாளர் அமர்நாத், ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம், மக்கள் அதிகாரம் மையம் ரவி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆளவந்தார், முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்டச் செயலாளர் பால்கி, தனியார் பேருந்து போக்குவரத்து கழக தலைவர் குரு ராமலிங்கம், தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் சுப்புராயன், ஆகியோர் கலந்து கொண்டனர்.