கடலூர், அக்.11- கர்நாடக அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை தந்து சம்பா பயிரை காப்பாற்ற வலியுறுத்தியும், நியூஸ் கிளிக் பத்திரிக்கை ஆசிரியரை கைது செய்து ஆள் தூக்கி உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்த ஒன்றிய அரசை கண்டித்தும் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் தலை மையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் திலகர், மாநில துணை தலைவர் வழக்கறிஞர் சந்திரசேகரன், மதிமுக மாவட்ட செயலாளர் என்.இராமலிங்கம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையன், ஜே.ராஜேஷ் கண்ணா, மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.கே.பக்கிரான், சிபிஐ மாவட்ட துணை செயலாளர் குளோப், நகர செயலாளர் நாகராஜ், விசிக மாவட்ட செயலாளர் செந்தில், மாநில அமைப்பு செயலாளர் வக்கீல் திருமார்பன், திக எழிலேந்தி, மமக மாவட்ட தலைவர் ஷேக் தாவூத், மாவட்ட செயலாளர் ரஹீம், திமுக விக்ரம், குடி யிருப்போர் சங்கம் சிறப்பு தலைவர் மருத வாணன், விச மாவட்ட துணை தலைவர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் பங்கேற்று பேசினர்.