தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, 61 வது வட்டத்தில் தேங்கியுள்ள குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும், கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்த வேண்டும், குறிப்பிட்ட கால இடைவெளியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என வலியுறுத்தி மேயர் வசந்த குமாரியிடம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தாம்பரம் பகுதித் தலைவர் ஏ.பிரேமாவதி, செயலாளர் ஆர்.விஜயா ஆகியோர் மனு அளித்தனர்.