திருவொற்றியூர் எர்ணாவூர் ஆதிதிராவிடர் காலனியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடைபெற்ற கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியம் பரிசு வழங்கினார். இதில் நிர்வாகிகள் தனலட்சுமி, செல்வகுமாரி, கே.கே.புஷ்பா, லோகநாயகி, சிபிஎம் பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.