districts

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை அருகமைப்பள்ளிகளாக அறிவித்திடுக!

கோவை, ஏப்.30- அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளையும் அருகமைப் பள்ளி களாக அறிவித்து அனைத்துக் குழந்தை களுக்கும் சமமான கற்றல்  வாய்ப்பைத் தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாநில மேடையின் தலைவர் இரத்தின சபாபதி,பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் கோவை யில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்துக் குழந்தைகளும் சமமான கற்றல் வாய்ப்பைப் பெறுவதற்கு வழி வகுப்பதே கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கம். கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவு 8 மிகத் தெளிவாக அரசு தன் பள்ளி கள் மூலம் கல்வி தர வேண்டும், யாராவது, அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து, வேறு பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்த்தால் அத்தகைய பெற்றோர் அரசிடம் கல்விக் கட்டணம் கோர முடியாது என்று தெளிவுபட கூறியுள்ளது.  எந்தப் பகுதிகளில் நேரடியாக அரசே கல்வி தரும் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறதோ அந்தப் பகுதிகளில் தனி யார் பள்ளியில் சேர்த்து குழந்தையின் கல்வி உரிமையை அரசு பாதுகாக்கும். அரசால் இயலவில்லை என்றால்தான் தனி யார் மூலம் கல்வி உரிமையை உறுதி செய்யும் சூழல் உருவாகும் என்பதை யாரும் உணர முடியும்.

தமிழ்நாடு அரசு தன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தையும் 2024 - 2025 கல்வி ஆண்டு முதல் அரு கமைப்பள்ளிகளாக அறிவித்து அனைத்துக் குழந்தைகளும் சமமான கற்றல் வாய்ப்பு களைப் பெரும் வகையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்க்க உரிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய நடைமுறையினை கர்நாடக அரசு கடந்த ஐந்தாண்டுகளாக வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.  இதற்காக கர்நாடக அரசு உருவாக்கி யுள்ள விதிகள் செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளதையும், உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைக்க மறுத்துள்ளது அரசே தனது பொறுப்பில் கல்வி உரிமையை வழங்க முன்வரும்போது அதற்கு நீதிமன்றம் என்றுமே துணை நிற்கும். கல்வி உரிமைச் சட்டத்தின் படி முழத்தொகையையும் அரசுப் பள்ளிகளில் செலவிடும் போது அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வலுவடைவதுடன் மாண வர்கள் தங்களின் குழந்தைப் பருவ உரிமையை முழுமையாக அனுபவிக்க இயலும். எனவே  2024 - 2025 கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைமுறை தொடங்கி உள்ள சூழலில்  விரைந்து உரிய அறிவிப்பினைத் தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.