districts

img

உடல் தானம் செய்ய அனைவரும் முன்வாருங்கள்: வி.எம்.எஸ். வேண்டுகோள்

சென்னை, மார்ச் 22- அனைவரும் உடல்  தானம் செய்ய முன்வாருங் கள் என தோழர் பாபு முதலாம் ஆண்டு நினைவு  தின கூட்டத்தில் வே.மீனாட்சி  சுந்தரம் கேட்டுக் கொண் டார். தோழர் சி.பாபுவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இலவச கண் பரிசோதனை, கண் புரை அறுவை சிகிச்சை,  சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு பரிசோதனை முகாம் மற்றும் உடன் தானம்  மற்றும் உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி புதனன்று (மார்ச் 22) சென்னை நம்மாழ்வார் பேட்டையில் நடைபெற்றது. தமிழ் மணவாளன் தலைமை தாங்கினார். பா.ஹேமாவதி வரவேற் றார். மருத்துவ முகாமை யும், உடல் தான இயக்கத் தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வே.மீனாட்சி சுந்தரம் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “மக்களோடு மிக நெருக்கமாக பழகி  அனைவரையும் அரவ ணைக்கும் பண்பு கொண்ட வர் பாபு. அவரது குடும்ப மும் தற்போது அந்த பணியை மேற்கொண்டு வருகிறது” என்றார். மரணம் இரண்டு வகைப்படும். ஒன்று அகால மரணம். மற்றொன்று வய தான பின்பு நிகழ்வது. மரமணமடைந்த பின்பு உயிரோடு இருப்பவருக்கு பயன்படும் வகையில் உடலை, உடல் உறுப்பு களை தானம் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தோழர் பாபுவின் திரு வுருவப் படத்தை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந் தரராசன் திறந்து வைத்தார். கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்மு கம், மாவட்டக் குழு உறுப் பினர்கள் கோடீஸ்வரி, ராஜ்குமார், வி.செல்வராஜ், தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் சி.சுந்தரவள்ளி ஆகியோரும் பேசினர். இந்த நிகழ்ச்சியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச்  செயலாளர் ஆர்.ராதிகா,  அகில இந்திய வழக்கறிஞர் கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.சிவக் குமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.பாக்கியலட்சுமி, ஆர்.ஜெயராமன், வி.ஜான கிராமன், முன்னாள் கவுன் சிலர் பா.தேவி, வழக்கறிஞர் பா.சீனிவாசன், பா.சதீஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தோழர் சி.பாபுவின் முதலாம் ஆண்டு நினைவு  தினத்தையொட்டி ஒர்க்கர்ஸ்  எஜூகேஷனல் டிரஸ்ட் சிஐடியு நடத்தும் நிர்மல் பள்ளிக்கு 10 ஆயிரம் ரூபாயை அவரது குடும்பத் தினர் சிஐடியு மாநிலத்  தலைவர் அ.சவுந்தரராச னிடம் வழங்கினர்.