அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை அகில இந்திய அளவில் நடைபெற உள்ள மறியல் போராட்டத்தின் நோக்கங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பிரச்சார இயக்கம் வேலூரில் செவ்வாயன்று (பிப்.13) நடைபெற்றது. இதில்எம்.பி.ராமச்சந்திரன், எஸ்.பரசுராமன், வி.நாகேந்திரன், எம்.காசி (சிஐடியு), கே.ஆர்.சுப்பிரமணி (தொமுச), ஏகாம்பரம்(ஐஎன்டியுசி), கலைவாணி(எச்எம்எஸ்), சிம்பு தேவன், ஏழுமலை (ஏஐசிசிடியு), ஜீவா (ஏஐடியுசி), விவசாயிகள் சங்கம் ஜி.நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.