சென்னை, ஆக. 23-
வணிகவரித்துறை அதி காரிகளுக்கு இலக்கு நிர்ணயம் செய்யும் போக்கை கைவிட வேண்டும் என வணிக வரித்துறை கருத்து கேட்பு கூட்டத்தில் வணிகர் பேரமைப்பு வலியுறுத்தி யுள்ளது.
தமிழ்நாடு வணிக வரித்துறை அனைத்து மாவட்ட கருத்துக் கேட்பு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் வணி கர் சங்கங்களின் பங்கேற்பு டன் சென்னை கலை வாணர் அரங்கத்தில் வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் புதனன்று (ஆக. 23) நடை பெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்க ளின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிர மராஜா அமைச்சர் பி.மூர்த்தி யிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில், வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்ய வருகின்ற அதி காரிகள் விதி மீறல்கள் இருப்பின் அதற்குரிய நோட்டீஸ் வழங்கி, வாய்ப்பு அளித்து, வரி ஏய்ப்பு இருந்தால் மட்டுமே அபராதம் விதிக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும், இந்தியா விலேயே வரி செலுத்து வதில் 4ஆவது மாநிலமாக இருக்கின்ற தமிழகத்தில் ஜி.எஸ்.டி அமலாக்கத்தில் அதிகாரிகளின் அத்து மீறல்கள் இருப்பதை உடனடியாக மாநில அரசு, தடுக்க வேண்டும், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத நிலையில், தமிழக அரசு வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு இலக்கு நிர்ணயம் செய்யும் போக்கு அதிகார அத்துமீறலுக்கு மட்டுமன்றி, இதர முறை கேடுகளுக்கும் வழி வகுக்கும். எனவே இலக்கு நிர்ணயம் என்பதை கைவிட்டு, ஜி.எஸ்.டி விதிகளுக்கு உட்பட்டு நியாயமான நட வடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
பழைய உலோக கழிவுப்பொருட்களுக்கு தற்போது உள்ள ஜி.எஸ்.டி வரிவிதிப்பை தவிர்த்து, உற்பத்தி நிலையில் மட்டுமே வரிவிதித்து, சிறு-குறு தொழில் மற்றும் வணிகர்களை பாது காக்க வேண்டும், மறு சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் குப்பைகளுக்கு வரி விதிப்பை விலக்கி, பிளாஸ்டிக் மறு சுழற்சியை ஊக்கப்படுத்தி சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க மக்களி டையே உரிய விழிப்பு ணர்வை ஏற்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப் பட்டுள்ளது.
கருத்து கேட்பு கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் வெ.கோவிந்த ராஜுலு, பொருளாளர் ஹாஜி. ஏ.எம்.சதக்கத் துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.