சென்னை, ஏப். 8 - மத்தியசென்னை மக்கள வைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் ஞாயிறன்று (ஏப்.7) எழும்பூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தயாநிதி மாறன் அளித்த பதில்கள் வருமாறு: இந்தியா கூட்டணி தலை வர்கள் சிறையில் இருந்த வர்கள் என்று கூறுகின்றனர். பாஜக கூட்டணியில் உள்ள டிடிவி தினகரன் முன்பு சிறையில்தானே இருந்தார். சசிகலா எங்கிருந்தார்? அமெரிக்காவிலா இருந் தார்? மகாராஷ்டிராவில் சிறையில் இருந்த என்சிபி தலைவர்கள் பலர் இப்போது பாஜகவில்தானே உள்ளார்கள். சிபிஐ வழக்கு இருந்தால் கூட “வாஷிங்பவுடர் நிர்மா” என கட்சியில் சேர்த்துக் கொள் வோம் என்று நிர்மலா சீத்தா ராமன் சொல்கிறார். இது தான் பாஜகவின் நிலை. 7.50 லட்சம் கோடி ரூபாய் ஊழல், முறைகேடு நடந்துள் ளதாக சிஏஜி அறிக்கை கூறு கிறது. அதனை ஏன் வருமான வரித்துறை விசாரிக்க வில்லை. அமலாக்கத்துறை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுகவை எதிர்த்து பாஜக போட்டியிடும் இடங் கள், அதிமுக கூட்டணி கட்சி களை எதிர்த்து பாஜக போட்டியிடும் இடங்களில் அதிமுக நிர்வாகிகள் வேலை செய்வதில்லை. மாறாக, பாஜகவிற்காக வேலை செய்கிறார்கள். மத்திய சென்னையிலேயே இதை பார்க்கலாம். தலை சொல்லாமல் வால் ஆடாது. பாஜக அதிமுக இடையே கள்ள கூட்டணி தொடர்கிறது என்றார்.