districts

img

மண்பாண்ட தொழிலுக்கு ஏரியில் மண் எடுக்க அனுமதி: விவசாயத் தொழிலாளர்கள் கோரிக்கை

திருவண்ணாமலை, மே 9- மண்பாண்ட தொழிலுக்கு ஏரி யில் மண் எடுப்பதை அனுமதிக்க வேண்டும் என்று விவசாயத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், விண்ணு வாம்பட்டு கிராமத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஏரியில் மண் எடுத்து காலம் காலமாக தொழில் செய்து வருகின்றனர். தற்போது ஏரிக்குள் செல்ல முடியாத அளவிற்கு மிகப்பெரிய பள்ளம் ஏற்படுத்தப்பட்டுடிருப்பதால் ஏரியில் மண் அள்ள முடியாத நிலை உள்ளது. இதனால் மாட்டு வண்டியை மட்டுமே நம்பியுள்ள பல குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி ஆண்டு ஒன்றுக்கு 800 மாட்டு வண்டி மண் எடுக்க உத்தரவு இருந்தும், தற்போது மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுப்பதை ஒரு சில அதிகாரிகள் தடுக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் ஏரி மண்ணை எடுத்து மண்பாண்ட தொழில் செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் சார்பில் விண்ணுவாம்பட்டு கிராமத்தில் இருந்து, மாவட்ட ஆட்சியர் அலு வலகம் வரை நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. ஏ.சர்தார் தலைமை தாங்கினார். இதில் மாநிலச் செயலாளர் எஸ்.பிரகாஷ்,  மாவட்டச் செயலாளர் கே.கே.வெங்கடேசன், நிர்வாகிகள் எம்.பிரகலநாதன், பாலசுந்தரம், சிபிஎம் வட்டாரச் செயலாளர் பி.சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கலசப்பாக்கம் வட்டாட்சியர் ராஜேஸ்வரி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை ஆகியோர் நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது மண்பாண்ட தொழிலாளர்கள் ஏரியிலிருந்து மண் எடுக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் தெரிவித்தார்.