கடலூர், ஆக.17-
கடலூர்மாவட்டம், ஓட்டிமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வேளாண் பணி நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் சேகர் தலைமை தாங்கினார். உதவித் தலைமை ஆசிரியர் செல்வ விநாயகம் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் லதா சந்திரசேகர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராஜவேலு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுசீலா வேழவேந்தன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், வார்டு உறுப்பி னர் திருநாவுக்கரசு, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் சுந்தரமூர்த்தி, அண்ணா மலை பல்கலைக்கழக தோட்டக்கலை துறை இறுதி ஆண்டு மாணவர்கள் தலைவர் கரண், ஆசிரியர்கள் சிவக்குமார், ஜெயந்தி, ஆனந்தி, பராசக்தி, தன்னார்வ ஆசிரியர் ஜானகி பிரியா உள்ளிட்டோர் பேசினர்.
அண்ணாமலை பல்கலைக்கழகம் தோட்டக்கலைத்துறை இறுதியாண்டு மாணவிகளால் நடத்தப்பட்ட இலக்கிய மன்ற போட்டிகள் மற்றும் விளையாட்டு போட்டி களில் பங்கேற்று வெற்றி பெற்ற 106 மாண வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற யாஷினி, இரண் டாம் இடம் பெற்ற கிஷோர், மூன்றாம் இடம் பெற்ற கலை வேந்தன் ஆகியோருக்கு ஆசிரியர் ஆழ்வார் நினைவாக ரொக்கப் பரிசு தலா ரூ.3000, 2000, 1000 மும், ஆசிரியர் மகாலிங்கம் நினைவாக தலா ரூ.5000, ரூ.3000, ரூ.2000மும் குடும்பத்தினர் வழங்கினர்.