சிதம்பரம், ஜன. 7- சிதம்பரம் அருகே சிலம்பி மங்கலம் கிராமத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழக வேளாண்மை பயிலும் இறுதி ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கான கிராமத்தில் தங்கி ஊரக வேளாண் பணி அனுபவம் பெறும் துவக்க நிகழ்ச்சி நடை பெற்றது. பல்கலைக்கழக பேராசிரியர் துரை ராஜ் தலைமை தாங்கினார். மாணவர் தலை வர் சேதுராமன் வரவேற்றார். சிலம்பி மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா ராஜேந்திரன், துணைத் தலைவர் பிரதாப், ஒன்றிய கவுன்சிலர் சந்திரகுமார், கிராம நிர்வாக அலுவலர் அலெக்சாண்டர், பள்ளி தலைமை ஆசிரியை ரெஜினா ஜெயமோகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு விவசாயம் எவ்வாறு ஒவ்வொரு வாழ்வியலையும் முன்னேற்றத்திற்கு கொண்டு செல்கிறது என்பது குறித்து பேசினர். வேளாண் மாணவர்கள் சீதாபதி, சசிதரன் ஆகியோர் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் வேளாண் பணி குறித்து பேசினர். அதேபோல் காட்டுமன்னார்கோவில் அருகே டி.நெடுஞ்சேரி கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 100 மரக்கன்றுகளை வழங்கினர்.