சென்னை, ஆக. 5-
பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் அஸ்ரா கார்க். பொறியியல் பட்ட தாரியான அவருக்கு காவல்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி யது. இதனையடுத்து தனது பாதையை மாற்றிய அவர், 2004ஆம் ஆண்டு ஐபிஎஸ்-ஆக தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டிற்கு வந்தார்.
அப்போதைய வேலூர் மாவட்டத்தில் இருந்த திருப்பத்தூரில் அஸ்ரா கார்க் காவல் உதவி கண்காணிப்பாளராக தனது காவல் பணியை தொடங்கினார். இதையடுத்து, 2008 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டத்திற்கு மாற்ற ப்பட்ட அவர், காவல் கண்காணிப்பாளராக 2 ஆண்டுகள் பணியாற்றினார். நெல்லையில் கந்து வட்டி கொடுமைக்கு எதிராக தீவிர மாக செயல்பட்டார். அதேபோல், சாதிய பாகு பாடுகளை களைவதிலும் அவர் முனைப்பு டன் செயல்பட்டார்.
2010ஆம் ஆண்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அவர் மாற்றம் செய்யப் பட்டார். தேர்தல் நடத்தை விதிமுறையின் போது பணப்பட்டுவாடா உள்ளிட்டவற்றுக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்பட்டதாக தேர்தல் ஆணையம் அஸ்ரா கார்க்கை பாராட்டியது. உத்தபுரம் என்ற கிராமத்தில் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டோர் செல்ல முடியாத நிலை இருந்தது. இரண்டு சமூகத் திற்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தி தாழ்த்தப்பட்ட மக்களை அந்த கோவிலுக் குள் செல்ல ஏற்பாடு செய்தார்.
நெல்லை, மதுரை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை இருந்ததை கடுமையாக எதிர்த்து அதனை நீக்கினார். மேலும், தரும புரி மாவட்டத்தில் பெண் சிசுகொலையில் ஈடு படுபவர்களுக்கு எதிராக கடுமையான நட வடிக்கைகளை மேற்கொண்டார். இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டு பலரும் கைது செய்யப்பட்டனர். கடமை யில் சிறந்து விளங்கியதற்காக வழங்கப் படும் தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் துறை பதக்கத்தையும் அஸ்ரா கார்க் பெற்று ள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டு மத்திய புலனாய்வு பிரிவிற்கு அவர் காவல் கண்காணிப்பாளராக பணி அமர்த்தப்பட்டார். தொடர்ந்து சிறப் பான பங்களிப்பை வழங்கிய அவர், 2018 ஆம் ஆண்டு மத்திய புலனாய்வு பிரிவில் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார். கடந்த ஆண்டு ஐஜியாக பதவி உயர்வு பெற்ற அவர், மீண்டும் தமிழ்நாடு பணிக்கு திரும்பினார்.
தமிழக தென்மண்டல ஐஜி யாக சிறப்பாக செயல்பட்ட அவர், தற்போது தலைநகர் சென்னையில் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக பணியமர்த் தப்பட்டுள்ளார். வழக்கம்போல், இந்த பொறு ப்பிலும் அவர் தனி முத்திரை பதிப்பார் என எதிர்பார்க்கலாம்.