districts

அடையாறு ஆற்றில் வெள்ளத் தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அமைச்சரிடம் குடியிருப்போர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

சென்னை, ஆக.4-

      பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, அடையாறு ஆற்றில் நடந்து  வரும் வெள்ளத் தடுப்பு பணிகளை முடிக்க வேண்டும் என்று வரதராஜ புரம் நலமன்றங்களின் கூட்டமைப்பு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

   இதுகுறித்து சங்கத்தின் தலைவர் வி.ராஜசேகரன், செயலாளர் டி. சந்தான கிருஷ்ணன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் தா.மோ. அன்பரசனை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட போது முதல்வர் மூன்று முறை வரதராஜபுரம் ஊராட்சிக்கு வருகை தந்து பாதிக்கப் பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித் தார்.

    அப்போது, அடுத்த ஆண்டு இந்த பாதிப்பு இருக்காது. அதற்கான நட வடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி யளித்தார். அதன்படி, தற்போது பணி கள் நடைபெற்று வருகின்றன.  

கரைகளை சீரமைத்தல்...

     தற்போது, அடையாறு ஆற்றின் கரை உடைப்பு ஏற்படும் இடங்களில் தடுப்பு சுவர்கள், தேவைப்படும் இடங்க ளில் வால்வு ஷட்டர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தடுப்பு சுவர் அமைக்க வாகனங்கள் வந்து செல்வதற்கு ஆற்றின் கரைகள் கரைக்கப்பட்டு வழி ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இன்னமும் அங்கு கரைகள் அமைக்கவில்லை. கடைசி நேரத்தில், கரைகள் அமைத்தால் மண் சரிந்து கரை உடைவதற்கு வாய்ப்பு இருக்கி றது. எனவே, உடனடியாக அதை செய்து முடிக்க வேண்டும்.

மூடு கால்வாய்...

     ராயப்பன் நகர் வழியாக அமைக்கப் பட்ட மூடு கால்வாய் அமைக்கும் பணி இன்னும் நிறைவு பெறவில்லை. 400  அடி புற வட்டச் சாலையில் மூடு கால்வாய் பணிகள் இன்னும் தொடங்க ப்படவில்லை. எதிர்வரும் மழைக் காலத்திற்கு இப்பணிகளை செய்து முடித்தால் தான் ராயப்பன் நகர், அஷ்ட லட்சுமி நகர், புவனேஸ்வரி நகர், சாந்தி நிகேதன், குமரன் நகர் உள்ளிட்ட வரத ராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க முடியும். எனவே இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

கூடுதல் பாலம்....

     அடையாறு ஆற்றின் மேல், 400 அடி புற வட்ட சாலை ராயப்பன் நகரில் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் அகலம் குறைவாக இருந்தால் 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழையின் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வரதராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

    எனவே, தற்போதுள்ள பாலத்திற்கு அருகில் மற்றொரு பாலம் கட்டு வேண்டும் என தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறோம். இது குறித்து தமிழ்நாடு அரசு, மாவட்டம் நிர்வாகத்தி டம் திட்டம் உள்ளதாகவும் அறிகிறோம். னவே, உடனடியாக அடையாறு ஆற்றின் மேல் ராயப்பன் நகரில் இன்னொரு பாலம் கட்டித்தர வேண்டும்.

சிறு பாலங்கள்...

     அஷ்டலட்சுமி நகரைச் சுற்றிலும் குமரன் நகர், புவனேஸ்வரி நகர், ஸ்ரீராம் நகர்,  மகாலட்சுமி நகர் ஆகிய பகுதி யில் சேர்கின்ற மழைநீர் மகாலட்சுமி நகர் வழியாக அடையாறு ஆற்றில் கலக்க வேண்டும். ஆனால்,  இந்த பகுதியில் சுமார் ஆறு ஏக்கர் அளவுக்கு நீர் நிலை உள்ளது. அவற்றில் சாதாரண சாலை கள் அமைக்கப்பட்டுள்ளது.

     இதனால், மழைநீர் அடையாறு ஆற்றில்  கலக்க முடியாமல் குடியிருப்பு பகுதிகளில் தேங்குகிறது. எனவே, மழைநீர் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி  பாய ஏதுவாக 4 சிறு பாலங்கள் கட்டப் பட வேண்டும். இதற்கு அனுமதி வழங்க ப்பட்டு கோப்பு நிலையில் உள்ளதாக வும் கூறப்படுகிறது. எனவே இந்த பணி களை விரைந்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் தெரி வித்துள்ளனர்.