திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டுக்குட்பட்ட ஆதிதிராவிடர் காலனியில் மழை வெள்ள நீருடன் கச்சா எண்ணெயும் கலந்து வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர். இதையடுத்து சிபிசிஎல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்குமார் தலைமையில் சனிக்கிழமை (டிச. 9) மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாக்கியலட்சுமி, பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.