100 நாள் வேலைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாணிக்கம் தலைமை தாங்கினார்.சங்க நிர்வாகிகள் கே. கே. வெங்கடேசன், எம்.பிரகலநாதன், டி.கே வெங்கடேசன், பி .சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.