districts

img

கடைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுக: மீனவர்கள் வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 2- துறைமுக விரிவாக்கம் என்ற பெயரில்  மீனவர்கள் கடைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர். சென்னை செங்கை மீன்பிடி தொழிற் சங்கம் (சிஐடியு) சார்பில் காசிமேட்டில் உள்ள மீன்வளத்துறை இணை இயக்குநர் அலுவலகம் அருகே வியாழனன்று (மார்ச் 2) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக காவல் நிலையம் அருகே தொழில்  செய்து வரும் மீனவர்களுக்கு அமைக்கப் பட்டுள்ள நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும், 60 வயது கடந்த அனைத்து மீனவர்களுக்கும் மாதம் 3,000  ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும், காசிமேடு மீன் பிடி துறைமுக விரிவாக்கம் என்ற பெயரில் பல்லாண்டு காலமாக தொழில் செய்து வரும் மீனவர்கள் கடைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. பொதுச் செயலாளர் ஆர்.லோகநாதன் தலைமை தாங்கினார். இதில் மாநிலச் செயலாளர் எஸ்.அந்தோணி, மாநிலத் தலைவர் ஜி.செலஸ்டின்,  பொருளாளர் எஸ்.ஜெய்சங்கர், மாவட்டத் தலைவர் பி.சி.மாறன்,  பொருளாளர் டி.வெங்கட், சிஐடியு  வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.லெனின் சுந்தர், எம்.செல்வானந்தம் (சிறுகடை வியாபாரிகள் சங்கம்), சங்க  நிர்வாகிகள் சித்ரா, பி.விஜயன் டி.மலர் கொடி, ஏ.ராஜேஷ், நாகலிங்கம் ஆகியோர் பேசினர்.