மலை வாழ் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டலில் ஈடுபட்ட வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அஞ்செட்டியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் குமாரவடிவேல் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தலைவர் முருகேசன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர், அஞ்செட்டி வட்டச் செயலாளர் தேவராஜ், கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் ராஜா,தளி ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், நிர்வாகிகள் அனுமப்பா,தர்மலிங்கம்,குண்டப்பா விஜயகுமார் மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராதா ஆகியோர் கலந்து கொண்டனர்.