districts

இயல், இசை நாடக கலைஞர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம்,ஜூலை 15-

    இயல், இசை நாடக கலைஞர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்திருக்கிறார்.

    இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- மாவட்டக் கலை மன்றங்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 100 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கவுரவிக்க பட்டுள்ளது.

     2022-2023 மற்றும் 2023-2024 ஆகிய ஆண்டுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் இயல், இசை நாடகம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு வயது மற்றும் கலை புலமை அடிப்படையில் விருதுகள் வழங்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேர்வாளர் குழு விரைவில் கூட்டப்பட்டுள்ளது.  

     ஆகவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைகள் மற்றும் செவ்வியல் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய விருது, மாநில விருது மற்றும் மாவட்டக் கலை மன்றத்தில் வழங்கப்பட்ட விருதுகள் பெற்ற கலைஞர்கள் இவ்விருதுகள் விண்ணப்பம் செய்ய க்கூடாது.  

     இம்மாவட்ட விருது பெறத் தகுதி வாய்ந்த கலைஞர்களிடம் இருந்து வருகிற 25 ஆம் தேதிக்குள் உதவி இயக்குநர், மண்டலக்கலை பண்பாட்டு மையம், மண்டல கயிறு வாரியம் அருகில், வல்லம் சாலை, பிள்ளையார்ப்பட்டி, தஞ்சாவூர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.  

   இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.