districts

img

சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவர்கள்

சென்னை, ஆக. 21-

        வளர்ச்சி கல்வி மையம், அன்பாலயா தொண்டு நிறுவனம் சார்பில் மன வளர்ச்சி குன்றிய மாண வர்களுக்கான 10 ஆம்  ஆண்டு விளையாட்டு போட்டிகள் தண்டையார் பேட்டை பாபு ஜெகஜீவன் ராம் விளையாட்டு திடலில் நடைபெற்றது. இதில் 16க்கும் மேற்பட்ட சிறப்பு பள்ளிகளில் இருந்து சுமார் 350 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

     “மெய்நிகர்” சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வகையில் 35 மாணவர்கள் பங்கேற்று பேப்பர் கப் கொண்டு 661.5 சதுர அடி யில் மூவர்ண நிறத்தில் தேசியக் கொடியை வடி வமைத்தனர். இந்நிகழ்ச் சிக்கு ஆகாஷ் மருத்துவ மனை மருத்துவர் ஏ.செல்வ ராஜ், வடசென்னை மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மருத்துவர் கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டு மாண வர்களுக்கு பரிசுகளை வழங்கினர். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறு வனம் மற்றும் யுனைடெட் வே சென்னை ஆகியோரின் உதவியுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.