புழல், ஜூலை 4- சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல் காந்தி பிரதான சாலை மற்றும் சுற்றுவட்டார சாலை களில் ஏராளமான மாடுகள், குதிரை கள் போக்குவரத்திற்கு இடையூறாக குறுக்கும் நெடுக்குமாக சுற்றி திரிகின்றன. இதனால், காலை நேரங்க ளில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்டோவில் பள்ளி செல்லும் மாணவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இதேபோல், ஆவடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட கோவில்பதாகையிலிருந்து செங்குன்றம் செல்லும் பிரதான சாலை யின் நடுவில் இரு சக்கர வாகனம்கூட போகமுடியாமல் மறித்து விடு கிறது. பகல் நேரங்களில்கூட வாகனங்களுக்கு இடையூர் செய்து வருகின்றன. புழல் பிரதான சாலையில் மாடு மற்றும் குதிரைகள் சுற்றித் திரிவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதால், இவற்றை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.