காஞ்சிபுரம், ஆக.14-
காஞ்சிபுரம் மாநக ராட்சிக்கு உட்பட்ட வேக வதி ஆற்று கரைக்கு மேல் பகுதியில் 52 ஆண்டுகளாக குடியிருக்கும் வேறு சொந்தவீடு இல்லாத ஏழை மக்களை வெளி யேற்றக்கூடாது என வலி யுறுத்தி திங்களன்று (ஆக.13) பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆற்றங்கரையில் போடப்பட்டுள்ள மதில் சுவர் வெளியே உள்ள வீடு களை அப்புறப்படுத்த மாட்டோம் என்ற மாவட்ட ஆட்சி நிர்வாகத்தின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பில் மறுகுடி அமர்த்தப்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு குடி யிருப்பு அருகாமையில் தறிக் கூடம் அமைத்துத் தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி வேகவதி ஆற்றுப் பகுதியில் குடியிருக்கும் அனைத்து குடியிருப்போர் சங்கம் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் குடி யிருப்போர் சங்கத் தலை வர் இ.முத்துக்குமார் தலை மையில் (ஆக.14) திங்கட் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடை பெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சங்கர், மாநகரச் செய லாளர் டி.ஸ்ரீதர், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம், மதி.ஆதவன் (விசிக), மகேஷ் (மதிமுக) உள்ளிட்ட பலர் பேசினர்.