districts

img

காப்பீடுகள் மீதான ஜிஎஸ்டி-யை ரத்து செய்க

சென்னை, அக்.30- காப்பீடுகள் மீதான 18 விழுக்காடு ஜிஎஸ்டி-யை  ரத்து செய்ய வேண்டு மென்று காப்பீட்டுக் கழக ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர். காப்பீட்டுக் கழக ஊழி யர் சங்கத்தின் சென்னை பகுதி-1ன் 66வது மாநாடு அக்.28-29 தேதிகளில் நடை பெற்றது. இந்த மாநாட்டில், எல்ஐசி-யை பொதுத் துறையாக பாதுகாக்க வேண்டும், அனைத்து ஊழியர்களுக்கும் 1995 ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என்பிஎஸ் திட்டத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு 14 விழுக்காடு பங்களிப் பினை செலுத்த வேண்டும், தொழிற்சங்க உரிமை களை பாதுகாக்க வேண்டும், மூன்று மற்றும் நான்காம் பிரிவு பணியிடங்களை நிரப்ப வேண்டும், 1.8.2022 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை தொடங்கி ஊதிய உயர்வு வழங்க வேண்டும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு அங்கீகாரம் மற்றும் கூட்டுப்பேர உரி மையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் தலைவர் ஜி.ஜெயராமன் தலைமை யில் நடைபெற்ற இந்த மாநாட்டை அகில இந்திய காப்பீட்டு ஊழி யர் சங்கத்தின் தலைவர் வி.ரமேஷ் தொடங்கி  வைத்தார். தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்ட மைப்பின் பொதுச்  செயலாளர் டி.செந்தில் குமார், சென்னை பகுதி-2ன்  தலைவர் மனோகர், தோழமை சங்க தலைவர்கள்  எஸ்.சையத் அப்சல், ஆர்.முருகேசன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். இணைச் செயலாளர் டி.ரமேஷ் நன்றி கூறினார். முன்னதாக சென்னை பகுதி-1ன் பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ் குமார் வரவேற்றார். பிரதிநிதிகள் மாநாட்டில் தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பின் இணைச் செயலாளர்கள் வி.சுரேஷ், ஐ.கே.பிஜூ,  முன்னாள் பொதுச் செய லாளர் கே.சுவாமிநாதன், சென்னை பகுதி -1ன் முன்னாள் நிர்வாகிகள் எல்.பழனியப்பன், கே.ஸ்ரீதர் உள்ளிட்டோர் பேசினர். கே.மீரா நன்றி கூறினார். 43 பேர் கொண்ட குழு வின் தலைவராக கே.கிரி தரன், பொதுச் செயலாள ராக எஸ்.ரமேஷ்குமார், பொருளாளராக யு.ரமேஷ் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.