இ-டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு, நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வெள்ளியன்று (அக்.21) வள்ளுவர் கோட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மத்தியசென்னை திட்ட கிளை சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் ரவி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் எம்.தயாளன், மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன், கிளை பொருளாளர் எஸ்.முருகவேல் உள்ளிட்டோர் பேசினர்.