சென்னை, பிப். 21- ஹவுஸ் கீப்பிங் உதவியாளர்கள் பணி நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டிஆர்இயூ சார்பில் சென்னை செண்ட்ரல் மூர்மார்க்கெட் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செயல் தலைவர் அ.ஜானகி ராமன், பொதுச்செயலாளர் வி.அரிலால், நிர்வாகிகள் ஆர்.இளங்கோவன், பேபி ஷகிலா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதுகுறித்து ஜானகிராமன் கூறுகை யில், நிரந்தர ஊழியர்களுக்கான தேர்வு முறையில் (ஆர்ஆர்சி) தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த ஊழியர்களாக நியமனம் செய்யப் பட்ட 202 ஹவுஸ் கீப்பிங் அசிஸ்டண்ட்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ரயில்வே மருத்துவமனை, ரயில்வே குடியிருப்புகள் மற்றும் அலுவ லகங்களில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. உயர்நீதி மன்ற தடை உத்தரவை மீறி ஆர்ஆர்சி தொழிலாளர்களை வேலைக்கு எடுக்காமல் பிடிவாதம் பிடிக்கும் ரயில்வே உயர் அதிகாரிகளை கண்டிக்கிறோம். எனவே உயர்நீதிமன்ற தீர்ப்பை மதித்து ஆர்ஆர்சி ஹவுஸ்கிப்பிங் தொழிலாளர் களை பணி நீக்கம் செய்ததை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றார்.