சென்னை, பிப். 13- அடக்குமுறைகளை எதிர்த்து உறுதியுடன் களம் கண்டவர் தோழர் உண்ணி என்று சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன் புகழாரம் சூட்டினார். தொழிற்சங்க முன்னோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பி.என்.உண்ணி படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமையில் திங்களன்று (பிப். 12) ஓட்டேரியில் நடை பெற்றது. மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தோழர் உண்ணியின் படத்தை திறந்து வைத்து பேசுகையில், உண்ணி தொழிலாளியாக இருந்து தொழிற் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு திறம்பட செயல்பட்டார். அவர் மட்டுமல்லாமல் அவரது துணைவி யார் கவுரி தேவியையும் சங்கத்தில் இணைத்து பணியாற்றினார். பெரிய கல்வி பின்புலம் இல்லாவிட்டாலும் தோழர் அரிபட் வழிகாட்டுதலில் பயிற்சி பெற்று தொழிலாளர் நல ஆணை யத்தில், விசாரணையின் போது, மெமோவுக்கு பதில் எழுதுவது என அனைத்து பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டார். இப்போதெல்லாம் வழக்கறிஞர்களை வைத்து வாதாடு கிறோம். ஆனால்அன்றைக்கு தொழிற்சங்க தலைவர்களே வாதா டுவார்கள். அப்படி மிகச்சிறப்பாக வாதாடியவர். கட்சி முடிவில் உறுதியாக நின்றவர் அம்பத்தூரில் பலர் தலைமை பொறுப்பில் இருந்து தொழிற் சங்கத்திற்கு எதிராக செயல்பட்ட போதெல்லாம், உண்ணி உறுதியாக கட்சியின் முடிவில் நின்று அவர்களை உறுதியோடு எதிர்த்து நின்றார். மிகப்பெரிய அம்பத்தூர் தொழிற்பேட்டையில், ஆயிரக்கணக்கான சிறு குறு நிறுவனங்கள் நிறைந்த பகுதி. போராட்டங்கள் நிறைந்த களமாக இருந்தது. சங்க பந்தல்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. தோழர்கள் தாக்கப்பட்டனர்.
சவால்களை எதிர்கொண்டு பணி
அன்று மோட்டார் சைக்கிள், செல்போன் போன்ற வசதி எல்லாம் கிடையாது. நடந்து செல்ல வேண்டும், இல்லையென்றால் சைக்கிளில் செல்ல வேண்டும். அப்படிப்பட்ட சவால்களை யெல்லாம் எதிர்கொண்டு உண்ணி உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் செயல்பட்டனர். தொழிற்சங்கத்திற் கும், கட்சிக்கும் ஆபத்து வரும் போதெல்லாம் தங்களை பற்றி கவலைப்படாமல், சங்கத்தையும் கட்சி யையும் காப்பாற்ற உறுதியோடு பலர் நின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் தொழிற்சங்க பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தொழிலாளர்களை மதத்தின், சாதியின் அடிப்படையில் பிளவுபடுத்தும் பணிகளை திட்டமிட்டு பாஜக மேற் கொள்கிறது. தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினருக்கும் எதிராக செயல்படும் பாஜகவை வீழ்த்த வேண்டிய கடமை நம்முன் உள்ளது. உண்ணி போன்ற தோழர்களின் அனுபவங்களை, தியாகங்களை படிப்பினையாக கொண்டு முன்னேறுவோம் என்று அ.சவுந்தரராசன் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வடசென்னை மாவட்டச் செய லாளர் எல்.சுந்தரராஜன், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்தி ரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் சு.லெனின் சுந்தர், ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செய லாளர் பா.ராஜாராமன் ஆகியோரும் பேசினர். முன்னதாக தியாகராஜன் (என்ரிகா) வரவேற்றார். சரவணன் (டேப்லட்ஸ்) நன்றி கூறினார். முன்னதாக அ.சவுந்தரராசன் தோழர் உண்ணியின் குடும்ப பாதுகாப்பு நிதி 2 லட்ச ரூபாயை கவுரி தேவியிடம் வழங்கினார். தோழர் உண்ணி குடும்பத்தின் சார்பில் தீக்கதிர், சிஐடியு செய்தி, மகளிர் சிந்தனை ஆகியவற் றிற்கு தலா ரூ 5 ஆயிரம் வீதம் அ.சவுந்தரராசனிடம் வழங்கப்பட்டது. இதில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பி னர் எம்.ராமகிருஷ்ணன், சிஐடியு பொரு ளாளர் வி.குப்புசாமி, நிர்வாகிகள் ஆர்.மணிமேகலை, கே.ரவிச்சந்திரன், ஆர்.ஜெயராமன், ஏ.ஆர்.பாலாஜி, ஜெய கோபால், மா.பூபாலன், ஆர்.லோக நாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.