districts

img

கடலூரில் ஏ.ஜான் விக்டர் படம் திறப்பு

கடலூர்,டிச.30- தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சங்கம் சிஐடியு-வின் முன்னாள் பொதுச் செயலாளரும்,  ஓய்வு பெற்ற நல அமைப் பின் துணைத் தலைவரான ஏ. ஜான் விக்டர் படத் திறப்பு நிகழ்ச்சி கடலூரில் நடைபெற்றது.  பி.கண்ணன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பி. முருகன், பொருளாளர் எம். அரும்பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கலந்து கொண்டு ஜான் விக்டர் படத்தை திறந்து வைத்தார். போக்குவரத்து சம்மேளன பொதுச் செயலாளர் கே. ஆறுமுக நயினார் அஞ்சலி உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் சிறப்பு தலை வர் ஜி.பாஸ்கரன், துணைத்  தலைவர் எம். முத்துக் குமரன், பொதுச் செய லாளர் எச். ரகோத்தமன்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, செயற்குழு உறுப்பினர்கள் வி.உதயகுமார், பி. கருப்பை யன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், விழுப்புரம் மாவட்டப் போக்குவரத்து சங்க செயலாளர் ஆர். மூர்த்தி, எடிபி பொதுச்  செயலாளர் கே.நவநீத கிருஷ்ணன், எம்எல்எப்  பொதுச்செயலாளர் ஆர். மணிமாறன், பிஎம்டிஎஸ் மாநிலத் தலைவர் டி. ஜெய்சங்கர், உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி உரையாற்றினர். இதில், ஜான் விக்டர் குடும்பத்தினர் அயன்புரத்தில் உள்ள நிர்மல் பள்ளிக்கு ரூ. 5 ஆயிரம் நிதி வழங்கினர்.