சர்வதேச யோகா தினத்தையொட்டி புதனன்று (ஜூன் 21) திருவள்ளூர் அடுத்த ஒண்டிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் அரங்கத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர், மணவாளநகர், ஒண்டிக்குப்பம் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 3 வயது முதல் 70 வயது வரை உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை 49 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் 30 நிமிடத்தில் 108 யோகாசனங்கள் செய்து சாதனை படைத்தனர்.